உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை - திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2023-08-02 06:59 GMT   |   Update On 2023-08-02 06:59 GMT
  • தனது 4 வயது மகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்தார்.
  • வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது

திருப்பூர், ஆக.2-

திருப்பூர் மாவட்டம் காங்கயம் இல்லியம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 43). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தேங்காய் கொப்பரை களத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரது கணவர் விபத்தில் இறந்தார். அவருடைய மகனும் வேறொரு விபத்தில் இறந்தார். இதனால் தனது 4 வயது மகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தானும் விஷம் குடித்து தனது மகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். தீவிர சிகிச்சைக்கு பின் ஆனந்தி உயிர் பிழைத்தார்.

இது குறித்து காங்கயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆனந்தியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த குற்றத்திற்கு ஆனந்திக்கு ஆயுள் தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

Tags:    

Similar News