உள்ளூர் செய்திகள்

மறியல் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

ராகுல்காந்திக்கு சிறைதண்டனை - மங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல்

Published On 2023-03-24 05:30 GMT   |   Update On 2023-03-24 07:45 GMT
  • குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
  • மத்திய அரசு வழக்கை வாபஸ் பெறக்கோரி சாலை மறியல் நடைபெற்றது.

மங்கலம் :

மோடி பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில் மத்திய அரசு பொய்யான வழக்கு போட்டதை கண்டித்தும் மத்திய அரசு வழக்கை வாபஸ் பெறக்கோரியும் மங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. மங்கலம் நால்ரோடு அருகே நடைபெற்ற கண்டன ஊர்வலம் மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் திருப்பூர் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சபாதுரை தலைமை தாங்கினார்.இதில் காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திருமலாகண்ணன், அப்துல்அஜீஸ், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி, மகிளா காங்கிரஸ் மகளிர்அணி மாநில செயலாளர் நவமணி , முன்னாள் வட்டார துணைத்தலைவர் தங்கவேல்,காங்கிரஸ் அலாவுதீன், மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அர்ஜூனன், ரபிதீன் ,எஸ்.டி.பி.ஐ.கட்சியை சேர்ந்த அபுதாஹிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News