உள்ளூர் செய்திகள்

கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் ஆய்வு செய்த காட்சி.  

காலை உணவு திட்டத்தை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Published On 2022-09-22 10:54 GMT   |   Update On 2022-09-22 10:54 GMT
  • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்தார்.
  • காலை உணவுத் திட்ட செயலியினை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் :

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர் - கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், வட சின்னாரி பாளையம் ஊராட்சி காரப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொன்னங்காளி வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி , வீணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவினை சாப்பிட்டு , காலை உணவுத் திட்ட செயலியினை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் வினீத் உடனிருந்தார். 

Tags:    

Similar News