உள்ளூர் செய்திகள்

போராட்டம் நடைபெற்ற போது எடுத்த போது படம்.

காங்கயம் அருகே விவசாயிகள் போராட்டம்

Published On 2023-09-24 15:50 IST   |   Update On 2023-09-24 15:50:00 IST
  • நீா்ப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.
  • சமச்சீா் பாசனம் மற்ற பகுதியில் உள்ளதைபோல மடைக்கு 7 நாட்கள் நீா் திறப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

காங்கயம்:

காங்கயம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை பிஏபி., நிா்வாகம் முறைகேடாக பயன்படுத்தி, பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், சமச்சீா் பாசனம் என்று பெயரளவில் வைத்துக் கொண்டு, வெள்ளக்கோவில் கிளைக்குத் தேவையான தண்ணீரை பிஏபி., நிா்வாகம் கொடுப்பதில்லை.எனவே விவசாயத்துக்கு முறையாக தண்ணீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காங்கயம், வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் இந்தக் கோரிக்கை தொடா்பாக நீதிமன்றத்தின் தீா்ப்புகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, காங்கயம் அருகே கரூா் சாலையில் உள்ள பகவதிபாளையம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளக்கோவில்) நீா்ப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.

பிஏபி., கிளை வாய்க்காலுக்கு நீா் திறக்கும் விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீா்ப்புகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சமச்சீா் பாசனம் மற்ற பகுதியில் உள்ளதைபோல மடைக்கு 7 நாட்கள் நீா் திறப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தண்ணீா் திருட்டை ஒழித்து தண்ணீா் திறக்கும் சுற்றுகளை அதிகப்படுத்த வேண்டும். பிஏபி., தொகுப்பு அணைகளின் காலாவதியான ஷட்டா் மற்றும் உபகரணங்களை உடனே மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இதில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் செ.நல்லசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு உரையாற்றினர். விவசாயிகள் பலர் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News