உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் வழியாக இயக்கப்படும் 4 ரெயில்களில் கூடுதலாக குளிர்சாதன வசதி பெட்டிகள் இணைப்பு

Published On 2022-09-14 08:34 GMT   |   Update On 2022-09-14 08:34 GMT
  • திருவனந்தபுரம்-மும்பை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.
  • புனே-கன்னியாகுமரி ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டி 2 இணைக்கப்படுகிறது.

திருப்பூர் :

திருவனந்தபுரம்-மும்பை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.16332) வருகிற 17-ந் தேதி முதல் 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி இரண்டு நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இதுபோல் மும்பை-திருவனந்தபுரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.16331) வருகிற 18-ந் தேதி முதல் 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி இரண்டு நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.

மேலும் கன்னியாகுமரி-புனே செல்லும் தினசரி ரெயிலில் (எண்.16382) 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி 2 வருகிற 22-ந் தேதி முதல் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. அதுபோல் புனே-கன்னியாகுமரி செல்லும் தினசரி ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டி 2 வருகிற 23-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News