உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-08-09 07:10 GMT   |   Update On 2022-08-09 07:10 GMT
  • வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
  • களப்பணியாளா் பணியிடத்துக்கு முதுகலை சமூக பணிகள் முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் :

சமூக நலத் துறையின்கீழ் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாவட்ட சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்காணும் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபா்கள் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதில் களப்பணியாளா் பணியிடத்துக்கு முதுகலை சமூக பணிகள் முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.அரசு அல்லது அரசு சாரா திட்டங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடா்பான களப்பணிகளில் குறைந்தது ஒரு ஆண்டு பணியாற்றியிருக்க வேண்டும். மூன்று வேளையில் சுழற்சி முறையில் பணியாற்றுவதுடன், சொந்தமாக இருசக்கர வாகனம் மற்றும் ஓட்டுநா் உரிமம் வைத்திருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணிக்கு ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

காவலா் பணிக்கு காவலா் அல்லது இரவுக்காவலராகப் பணிபுரிந்த அனுபவம் இருப்பதுடன், சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ஆகவே மேற்கண்ட தகுதியுடைய திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த நபா்கள் தங்களுடைய விண்ணப்பங்களை திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் வருகிற 25 ந் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலா், அறை எண் 35,36, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்-641604. ேமலும் விவரங்களுக்கு 0421-2971168, 91500-57947 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News