வெப்பத்தை தணிக்க போக்குவரத்து போலீசாருக்கு மோர்
- காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வெயில் கடுமையாக உள்ளது.
- பணியில் உள்ள போலீசாருக்கு வெப்பத்தினால் உடல் சோர்வு ஏற்படுகிறது.
பல்லடம் :
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வெயில் கடுமையாக உள்ளது. இந்த நிலையில் பல்லடத்தில் போக்குவரத்து போலீசாருக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் வழங்கப்ப ட்டது. இது குறித்து போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் திருநாவு க்கரசு கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால், வெப்பம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்தை சீர் செய்ய பணியில் உள்ள போலீசா ருக்கு வெப்பத்தினால் உடல் சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வை தடுக்கும் வகையில் அவர்களுக்கு காலை,மாலை, இரு வேளைகளிலும் மோர் மற்றும் பழச்சாறு கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில்,பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா அறிவுறுத்தலின்படி போக்குவரத்து போலீசாருக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் வழங்கப்ப டுகிறது. தினமும் காலை 11 மணிக்கு மோர் அல்லது பழச்சாறு, அதேபோல மாலை 3 மணிக்கு பழச்சாறு அல்லது மோர் வழங்கப்படு கிறது.இந்த மோர் வழங்கும் பணி மே மாதம் வெப்பம் தணியும் வரை கொடுக்கப்படும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.