உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

வெள்ளகோவிலில் காதலி திட்டியதால் காதலன் தற்கொலை

Published On 2023-08-15 15:22 IST   |   Update On 2023-08-15 15:22:00 IST
  • கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்து விட்டு காதலிக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
  • வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன் கார்த்திகேயன் (வயது 25). இவர் தற்போது தனது பெற்றோருடன் வெள்ளகோவில் அருகே உள்ள சிவநாதபுரத்தில் தங்கி விசைத்தறி கூட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்து விட்டு காதலிக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிருப்தி அடைந்த காதலி இப்படி குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் நான் எப்படி உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கார்த்திகேயன் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News