உள்ளூர் செய்திகள்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் வியாபாரி கைது
- மங்கலம் பகுதியில் வேன் மூலம் பழங்களை விற்பனை செய்து வருகிறார்.
- சிறுவனின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
வீரபாண்டி :
மதுரை மாவட்டம் எம்.கல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 36). இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். மங்கலம் பகுதியில் வேன் மூலம் பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக 15 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுவனின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சிறுவனிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.