உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அவினாசியில் வழுக்கு மரம் ஏறுதல் -உறியடி திருவிழா

Published On 2022-08-23 11:17 GMT   |   Update On 2022-08-23 11:17 GMT
  • கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரிவரதராஜப்பெருமாள் கோவில் முன் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா நடந்தது.
  • 30 அடி மூங்கில் நடப்பட்டு அதன் உச்சியில் ரூ. 2 ஆயிரம் பணமுடிப்பு கட்டப்பட்டிருந்தது.

அவினாசி :

கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு அவினாசியில் உள்ள கரிவரதராஜப்பெருமாள் கோவில் முன் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா நடந்தது. கோவில் முன் 30 அடி மூங்கில் நடப்பட்டு அதன் உச்சியில் ரூ. 2 ஆயிரம்பணமுடிப்பு கட்டப்பட்டிருந்தது. நேற்று மாலை 7 மணி முதல் ஏராளமான வாலிபர்கள் தொடர்ந்து வழுக்குமரம் ஏறி இரவு 9 மணியளவில் பணமுடிப்பை அவிழ்த்து எடுத்தனர்.

இதையடுத்து நடந்த உறியடி திருவிழாவில் திரளானோர் கலந்துகொண்டு உறி அடித்தனர்.முன்னதாக நேற்று காலை கரிவரதராஜப்பெருமாளுக்கு விசேச பூஜை திருமஞ்சனம் ஆகியவை நடந்தது. இரவு 9.30 மணியளவில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

Similar News