'டிஜிட்டல்' மயமாகிறது... பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி
- கல்வித்துறையில் இது மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாகும்.
- எஸ்.எஸ்.எல்.சி உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு பழைய முறையே தொடரும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விடைத்தாள்களைத் திருத்துவதற்கு ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' எனும் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. கல்வித்துறையில் இது மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாகும்.
இதுவரை ஆசிரியர்கள் மாணவர்கள் பேப்பரில் எழுதிய விடைத்தாள்களைப் பேனா கொண்டு திருத்தி வந்தனர். ஆனால் இனி அப்படி கிடையாது. மாணவர்கள் வழக்கம் போல விடைத்தாள்களில் தேர்வு தேர்வை எழுதினாலும், அந்த விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றப்படும். ஆசிரியர்கள், அதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக மென்பொருள் மூலம் கம்ப்யூட்டர் திரையில் விடைத்தாள்களைப் பார்த்து திருத்தி மதிப்பெண்களை வழங்குவார்கள். இந்த நடைமுறை, தற்போது நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.
ஆனால் எஸ்.எஸ்.எல்.சி உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு பழைய முறையே தொடரும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
இந்த புதிய முறையில் விடை திருத் தும் பணிக்காக அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் நாளைக்குள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர்களுக்கு 14 முதல் 16-ந் தேதி வரை ஆசிரியர்களுக்கு இதற்கான ஆன்லைன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.