உள்ளூர் செய்திகள்

கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்ட காட்சி. 

அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை நிறுத்த வேண்டும் - பொதுமக்கள் மனு

Published On 2023-03-30 08:39 GMT   |   Update On 2023-03-30 08:39 GMT
  • அலகுமலை ஊராட்சியில் கடந்த சில வருடங்களாக ஜல்லிகட்டு விழாவானது நடைபெற்றது.
  • ஜல்லிக்கட்டுவிழா நடைபெற வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூர் :

அலகுமலை ஊராட்சி பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு வட்டம், அலகுமலை ஊராட்சியில் கடந்த சில வருடங்களாக ஜல்லிகட்டு விழாவானது நடைபெற்றது. இதனால் நாங்கள் பட்ட கஷ்டங்களை மனுவாகஎழுதி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து இருந்தோம்.

ஆனால்25.3.2023 அன்று அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்றுதமிழ்நாடு செய்திதுறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார். 22.3.2023 அன்றுநடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் அலகுமலை ஊராட்சியிலும் அலகுமலையை சுற்றிலும் குறிப்பிட்டதூரம் ஜல்லிக்கட்டுவிழா நடைபெற வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டுள்ளது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட வேலை செய்து வருகிறார்கள். இதனால் அலகுமலைமக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலைஉருவாகி உள்ளது. வரும் நாட்களில் மேலும் மக்களிடம் பதட்ட சூழ்நிலைஉருவாகும் சூழல் உள்ளது. எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு ஜல்லிகட்டு விழா தொடர்பான நடவடிக்கை யை நிறுத்தி ஜல்லிக்கட்டு போட்டிக்கு உண்டான பொருட்களை அப்புறப்ப டுத்த வேண்டும். மேலும் அலகுமலை ஊராட்சி கிராமசபா கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என தெரிவித்து ள்ளனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில்இன்று நடைபெற்ற விவசாய குறைதீர்க்கும் கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டது. 

Tags:    

Similar News