உள்ளூர் செய்திகள்

தாயும், சேயும் நலமுடன் இருப்பதை படத்தில் காணலாம்.

திருப்பூரில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

Published On 2022-09-12 06:33 GMT   |   Update On 2022-09-12 06:33 GMT
  • மூன்றாவதாக கர்ப்பமாக இருந்த வள்ளிக்கு அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது.
  • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸூக்கு தொடர்பு கொண்டார்.

திருப்பூர் :

திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், (வயது 30). இவரது மனைவி வள்ளி( 25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவதாக கர்ப்பமாக இருந்த வள்ளிக்கு அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸூக்கு பிரகாஷ் தொடர்பு கொண்டார். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் வள்ளியை அழைத்துக் கொண்டு, தலைமை அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தனர். அவிநாசி - திருப்பூர் ரோட்டில் ஆம்புலன்ஸ் பயணிக்கும் போது, வள்ளிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து டிரைவர் செந்தில்குமார் ஆம்புலன்ைஸ ஓரமாக நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் சுரேகா பிரசவம் பார்த்தார். அப்போது வள்ளிக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Tags:    

Similar News