உள்ளூர் செய்திகள்

பந்தல் அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

பல்லடத்தில் 17-ந்தேதி பா.ஜ.க. பொதுக்கூட்டம் - பந்தல் அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா

Published On 2022-07-05 10:41 GMT   |   Update On 2022-07-05 10:41 GMT
  • பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளார்.
  • மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பல்லடம் :

பல்லடம் கரையான்புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளார். பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

மாநில பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தம், மாநிலத்துணைத்தலைவர் மலர்கொடி, திருப்பூர் வடக்கு மாவட்டத்தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜோதிமணி, வினோத் வெங்கடேஷ், விவசாய அணி ரமேஷ் குமார், நகரத்தலைவர் வடிவேல், நிர்வாகிகள் ரமேஷ், பன்னீர் செல்வகுமார், துரைக்கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News