தமிழ்நாடு செய்திகள்

வருகிற 19-ந்தேதி தஞ்சையில் தி.மு.க. மகளிரணி மாநாடு

Published On 2026-01-02 14:15 IST   |   Update On 2026-01-02 14:15:00 IST
  • தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது.
  • மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் வருகிற 19-ந்தேதி தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் தஞ்சையில் வருகிற 19-ந்தேதி மாலை 4 மணிக்கு தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெறுகிறது.

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

முன்னதாக, டிசம்பர் மாதம் 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' என்ற தலைப்பில் தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News