உள்ளூர் செய்திகள்

மரத்தில் பைக் மோதி தொழிலாளி சாவு

Published On 2023-09-19 09:57 GMT   |   Update On 2023-09-19 09:57 GMT
  • வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது பரிதாபம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் அருகே உள்ள பலபநத்தம் கிராமம் பூசாரிவட்டம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன்( வயது 47). கூலி தொழிலாளி.

இவர் நேற்று மாலை வேலை முடிந்ததும் ஆலங்காயத்தில் இருந்து வீட்டிற்கு தனது பைக்கில் சென்றார். அப்போது நரசிங்கபுரம் கங்கையாம்மன் கோவில் அருகே சென்றபோது பைக் நிலைதடுமாறி சாலையின் ஓரம் உள்ள ஒரு புளிய மரத்தில் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் குமரேசன் பலத்த காயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் உடனடியாக குமரேசனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News