உள்ளூர் செய்திகள்
- ரோந்து பணியில் சிக்கினர்
- 12 பாட்டில்களை பறிமுதல்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் மாதனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் போலி மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ஆம்பூர் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருளானந்தம் மற்றும் போலீசார் மாதனூர், பெரியாங்குப்பம், சுபேதர் தெரு, தோட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சுபேதர் தெருவை சேர்ந்த கண்ணப்பன் மனைவி ராதிகா (வயது 36) என்பவர் போலி மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்ததுடன், அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.