உள்ளூர் செய்திகள்

பீடி தொழிலாளர்களுக்கான ஒப்பந்த அரசாணையை வெளியிட வேண்டும்

Published On 2022-11-17 15:17 IST   |   Update On 2022-11-17 15:17:00 IST
  • பீடி தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை
  • கலெக்டருக்கு மனு

திருப்பத்தூர்:

மாநில காங்கிரஸ் பீடி தொழி லாளர்கள் நல சம்மேளனத் தின் மாநில பொதுச்செயலா ளர் ஆர்.முனிராஜ் தமிழக முதல் - அமச்சர். மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளார்.

அதில் வேலூர், திருப்பத்தூர் ஒருங் கிணைந்த மாவட்டத்தில் 10 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு நீண்டநாளுக்கு பிறகு 10.5.2022 அன்று நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்.கிரிலோஷ் குமார், முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் உ.லட்சுமிகாந்தன் முன்னி லையிலும், கூடுதல் தொழிலாளர் ஆணையர் ராமசந்திரன், தொழிலாளர் துறை ஆணை யாளர்அப்துல் காதர், உதவி ஆணையாளர் இந்துமதி, வேலூர், திருநெல்வேலி மாவட்ட பீடி உற்பத்தியாளர் சங்கம், ஐ.என்.டி.யு.சி. பீடி தொழிலாளர் நல சங்கம் சார்பில் தமிழ்நாடு பீடி தொழிலாளர்கள் சம்மேளத்தின் மாநில தலைவர் சி.சுப்பிரமணி, மாநில பொதுச் செயலாளர் முனீராஜி ஆகியோரும் கலந்து கொண்டு கையொப் இடப்பட்டது.

பம் இன்றைய தேதி வரையில் இந்த ஒப்பந்த அரசாணை வெளிவரவில்லை. ஆகையால் முன் தேதியிட்டு உடனடியாக தொழிலாளர்கள் நலன் கருதி அரசாணையை வெளியிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

Tags:    

Similar News