ரெயில் மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் பலி
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னதோட்டலாம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிரி (வயது 52).
இவர் ஆம்பூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை செய்து வந்தார் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று கிரி வளத்தூர் குடியாத்தம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கோயம்புத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவம் இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக கிரி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.