ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்களை தேவராஜி எம்.எல்.ஏ. வழங்கினார்.
வேளாண்மை துறை விரிவாக்கம் மையத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
- தேவராஜி எம்.எல்.ஏ வழங்கினார்
- விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வட்டார வேளாண் துறை சார்பில் சுற்று பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு விவசாயம் சார்ந்த திட்டங்கள் மூலம் மானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் வேளாண்மை துறை சார்ந்த தோட்டக்கலைத் துறை சார்ந்தும் இயந்திரவியல் துறை சார்ந்தும் பல்வேறு பகுதி கிராம விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய விவசாய கருவிகள், தோட்ட பயிர்கள், விதைகள், உரங்கள், சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மானியத்துடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை துறை சார்ந்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விவசாய ஈடுபொருட்களை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் ம.அன்பழகன், நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், உள்ளிட்ட வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.