என் மலர்
நீங்கள் தேடியது "inputs for farmers"
- ஆத்மா திட்டத்தின் திருவிழா நடைபெற்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கலந்தரா ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் வேளாண்மை துறையின் ஆத்மா திட்டத்தின் கீழ் கிசான் கோஷ்தி என்ற விவசாயத் திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.
ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இதில் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பா அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இதில் விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருட்களை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆத்மா மானிய விலையில் திட்ட தலைவர் சரவணன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மேரி வீனஸ், உதவி தொழில் நுட்ப மேலாளர் ஸ்ரீநாத், வேளாண்மை உதவி அலுவலர் அனிதா, ஒன்றிய கவுன்சிலர் கே.ஜி. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தேவராஜி எம்.எல்.ஏ வழங்கினார்
- விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வட்டார வேளாண் துறை சார்பில் சுற்று பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு விவசாயம் சார்ந்த திட்டங்கள் மூலம் மானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் வேளாண்மை துறை சார்ந்த தோட்டக்கலைத் துறை சார்ந்தும் இயந்திரவியல் துறை சார்ந்தும் பல்வேறு பகுதி கிராம விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய விவசாய கருவிகள், தோட்ட பயிர்கள், விதைகள், உரங்கள், சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மானியத்துடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை துறை சார்ந்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விவசாய ஈடுபொருட்களை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் ம.அன்பழகன், நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், உள்ளிட்ட வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.






