என் மலர்
உள்ளூர் செய்திகள்

மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
- ஆத்மா திட்டத்தின் திருவிழா நடைபெற்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கலந்தரா ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் வேளாண்மை துறையின் ஆத்மா திட்டத்தின் கீழ் கிசான் கோஷ்தி என்ற விவசாயத் திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.
ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இதில் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பா அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இதில் விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருட்களை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆத்மா மானிய விலையில் திட்ட தலைவர் சரவணன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மேரி வீனஸ், உதவி தொழில் நுட்ப மேலாளர் ஸ்ரீநாத், வேளாண்மை உதவி அலுவலர் அனிதா, ஒன்றிய கவுன்சிலர் கே.ஜி. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






