உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-10-01 08:45 GMT   |   Update On 2023-10-01 08:45 GMT
  • குடும்ப தகராரில் விபரீதம்
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

ஆலங்காயம்:

வாணியம்பாடி கல் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளி மகி (40) மனைவி கவிதா(35) இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனஉலைச்சலுக்கு ஆலான கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டவுன் போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News