உள்ளூர் செய்திகள்

தீ விபத்து குறித்து விழிப்புணர்வு

Published On 2023-08-09 15:49 IST   |   Update On 2023-08-09 15:49:00 IST
  • போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது
  • தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தீயணைப்பு துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சார்பில் அரசனப்பள்ளி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தீ விபத்து விழிப்புணர்வு மற்றும் போலி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் 300 மாணவ மாணவிகள் முன்னிலையில் தீ விபத்து விழிப்புணர்வு மற்றும் பருவ மழை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

மேலும் போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News