உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி விவசாயி பலி

Published On 2023-03-23 09:13 GMT   |   Update On 2023-03-23 09:13 GMT
  • அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் வாலூர் பகு தியை சேர்ந்தவர் பெரியதம்பி. இவரது மகன் சின்னபையன் (வயது 55), விவசாயி. இவர் நேற்று இரவு மோட்டார் சைக் கிளில் நாட்டறம்பள்ளி அருகே பங்களா மேடு ரெயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சின்னப் பையன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News