உள்ளூர் செய்திகள்

குடிசை வீட்டில் தீ விபத்து

Published On 2023-04-23 14:03 IST   |   Update On 2023-04-23 14:03:00 IST
  • பழங்கள் எரிந்த சாம்பலானது
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே கண்ணடிகுப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45).

சென்னை- பெங்களூர் சாலையில் தனது குடிசை வீட்டில் பழக்கடை வைத்து விற்பனை செய்தார். நேற்று இரவு குடிசை வீட்டில் தீ விபத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் பழங்கள் தீயில் எரிந்த சாம்பலானது.

இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News