உள்ளூர் செய்திகள்

புதரில் பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2023-08-24 09:18 GMT   |   Update On 2023-08-24 09:18 GMT
  • 1 டன் சிக்கியது
  • வருவாய் துறையினருடன் சோதனை செய்தனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளியை அடுத்த ஜெயந்திபுரம் அருகே வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக அப்பகுதியில் உள்ள முட்புதரில் ரேசன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது.

அதைதொடர்ந்து அவர் வட்ட வழங்கல் அலுவலர் ராமன் மற்றும் வருவாய் துறையினருடன் சென்று சோதனை செய்தார்.

அப்போது அரசனப்பள்ளி கிராமத்தில் முட்புதரில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேசன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News