உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்கள் தர்ணா

Published On 2023-08-14 09:25 GMT   |   Update On 2023-08-14 09:25 GMT
  • 120 மாணவர்களில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக புகார்
  • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

ஆம்பூர்:

திருப்பூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் மஜிருலூம் கல்லூரி இயங்கி வருகிறது.

இங்கு 120 மாணவர்கள் பி.காம் தேர்வு எழுதினர். அதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News