உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் 2 பாம்புகள் பிடிப்பட்டது

Published On 2023-08-07 07:54 GMT   |   Update On 2023-08-07 07:54 GMT
  • தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
  • காப்பு காட்டில் விடப்பட்டது

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த ஆளப்பெரியானூர் கிராமத்தில் வசித்து வரும் தென்னரசு என்பவரின் வீட்டில் பாம்பு புகுந்தது.

அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உடனடி யாக நாட்ட றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ½ மணி நேரம் போராடி சுமார் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்தனர்.

இதேபோல நாட்டறம்ப ள்ளி அருகே சோமநா யக்கன்பட்டி பகுதியில் உள்ள ஜெர்ரா வட்டத்தில் வசித்து வரும் முனுசாமி என்பவரின் வீட்டில் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பாம்பை பிடித்தனர். நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் 2 பாம்புக ளையும் வனத்துறை மூலம் காப்பு காட்டில் விட்டனர்.

நாட்டறம்பள்ளி பகுதியில் அடிக்கடி வீடுகளில் பாம்புகள் நுழை வதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News