ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவில் பைக் விபத்து
- வாலிபர் படுகாயம்
ஜோலார்பேட்டை:
சென்னை அருகே கேளம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மகன் தீபக் (வயது 21). இவர் ஏலகிரி மலையில் நடைபெறும் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு வந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு தனது பைக்கில் சென்னை நோக்கி புறப்பட்டார் அப்போது ஏலகிரி மலை 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதி வலது கால் முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது சம்பந்தமாக தீபக் கொடுத்த புகாரின் பேரில் ஏலகிரி மலை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் மயில்வாகனம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.