உள்ளூர் செய்திகள்
ஓட்டலில் தாய், மகன் மீது தாக்குதல்
- வாலிபர் கைது
- ஜெயிலில் அடைத்தனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் எஸ்.கே.ரோட்டில் உள்ள ஓட்டலில் முன்விரோத சண்டை காரணமாக நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த வில்வநாதன் மனைவி வசந்தம்மாள் (வயது 62).
அவரது மகன் மோகன் (35) ஆகிய 2 பேரையும் சாய்பாபா கோவில் தெருவைச் சேர்ந்த துளசி மகன் கார்த்திக் வயது (24) கூலி தொழிலாளி என்பவர் சரமாரியாக தாக்கியதில் தாய் மகன் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.