உள்ளூர் செய்திகள்
- 10 லிட்டர் பறிமுதல் செய்தனர்
- போலீசார் சோதனையில் சிக்கினார்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் திரியாலம் பகுதியில் சோதனையில் ஈடு பட்டனர்.
அப்போது வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சின்ன சாமி (வயது 65) என்பவரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 10 லிட் டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.