உள்ளூர் செய்திகள்

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

Published On 2023-07-11 08:24 GMT   |   Update On 2023-07-11 08:24 GMT
  • நாளை கடைசி நாள்
  • கலெக்டர் தகவல்

திருப்பத்தூர்:

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 330

தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில்

தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு சேர்க் கைக்கான விவரங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் தற்காலிக ஒதுக்கீடு ஆணையை மேற்குறிப்பிட்ட இணை யதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அசல் சான்றிதழுடன் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்ய வேண்டும். இதற்கான கடைசி நாள் நாளை (புதன்கிழமை) ஆகும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News