உள்ளூர் செய்திகள்

ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

Published On 2023-08-08 09:35 GMT   |   Update On 2023-08-08 09:35 GMT
  • யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News