உள்ளூர் செய்திகள்

தடுப்பனையில் மூழ்கி கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பலி

Published On 2023-08-16 09:47 GMT   |   Update On 2023-08-16 09:47 GMT
  • 2 மணி நேரம் போராடி இருவரையும் பிணமாக மீட்டனர்
  • கோவிலுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

வாணியம்பாடி:

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த மசிகம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்.இவரது மகன் ஜீவா (வயது 27). ஜனார்த்த னன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 7 பேர், வாணி யம்பாடி அருகே தமிழக-ஆந் திர எல்லையில் புல்லூர் தடுப் பணை பகுதியில் உள்ள கனக நாச்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

பின்னர் அங்குள்ள தடுப் பணை பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். அப் போது ஜீவா, அவருடைய உறவினரான எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் கல்லூரி மாணவர் மனோகரன் (19) ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் நீரில் மூழ்கினர். இதனை கண்ட உடன் இருந்தவர்கள் கூச்சலி டவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று அவர் களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்கள் ஆழமான பகுதியில் நீரில் மூழ்கியதால் மீட்க முடியவில்லை.

சுமார் 2 மணி நேரம் போராடி இருவரையும் பிணமாக மீட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குப்பம் போலீசார் பிணத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத் துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News