முக்கூடல் தொடக்க பள்ளியில் முப்பெரும் விழா
- விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சபரி கிரிநாத் வரவேற்று பேசினார்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் பரிசுகளை வழங்கினார்.
முக்கூடல்:
முக்கூடலில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, பள்ளி மேலாண்மை குழு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சபரி கிரிநாத் வரவேற்று பேசினார். மேலாண்மை குழு தலைவர் புவனேஸ்வரி தலை மை தாங்கினார். முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் முன்னி லை வகித்தார். தன்னார்வலர் ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார்.
விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் பரிசுகளை வழங் கினார். பேரூராட்சித்துணை தலைவர் லட்சுமணன், பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் ஜோசப் கிரிகோரி, பொதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுடலைமணி, இடைகால் சாரதா பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி காந்தி, நடுக்கல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், முக்கூடல் சொக்கலால் சத்திரிய வித்யாசாலா பள்ளி ஆசிரியர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.