உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுபடகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2023-11-06 08:38 GMT   |   Update On 2023-11-06 08:38 GMT
  • நாட்டுப் படகு மீனவர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாட்டு படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்களின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுபடகு மீனவர்கள் மீன்வளத்துறையின் பல்வேறு அறிவிப்புகளை கண்டித்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 3-ந் தேதி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நாட்டுப்படகு மீனவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அதில் மின் வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் கூறும் பொழுது நாட்டு படகுகளுக்கு பச்சை நிற வண்ணம் அடிக்க வேண்டும், நாட்டு படகுகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும், படகுகளுக்கு மீன் பிடி உரிமம் அனுமதி பெறவேண்டும் என அரசின் அறிவிப்புகளை தெரிவித்தார்.

இதனை செய்பவர்க ளுக்கு மட்டும் மானிய விலையில் டீசல் வழங்கப்படும் என தெரித்தார். அவரின் இந்த அறிவிப்பினை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாட்டு படகு மீனவர்களும் ஒருநாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் சங்க தலைவர் கயாஸ் தலைமையில், மாவட்ட கலெக்டர், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்துள்னர்.

நாட்டுப் படகு மீனவர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாட்டு படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்களின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.என்று கூறுகின்றனர். 

Tags:    

Similar News