உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீடு.

தூத்துக்குடியில் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் கொள்ளை

Published On 2022-06-08 10:07 GMT   |   Update On 2022-06-08 10:07 GMT
  • தூத்துக்குடியில் கார் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
  • மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகரை அடுத்த பால தண்டாயுத நகரை சேர்ந்தவர் இசக்கி (வயது 50). இவர் மடத்தூர் பகுதியில் கார் டிங்கரிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

நேற்று இரவு இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றார். அதிகாலை 4 மணியளவில் அவர்கள் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வீட்டு பத்திரங்கள் கொள்ளை யடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து இசக்கி தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

கொள்ளையர்கள் பிரிட்ஜில் இருந்த திண்டபண்டங்களை எடுத்து திண்றுள்ளனர். மேலும் குழந்தைகளின் பள்ளிக்கூட பையில் வைத்திருந்த பாக்கெட் மணி பணம் ரூ.200-ஐயும் எடுத்து சென்றுள்ளனர்.

மேலும் தங்களின் கைரேகைகளை அழிக்க 4 குடங்களில் இருந்து தண்ணீரை எடுத்து வீட்டின் அனைத்து அறைகளிலும் ஊற்றி, கழுவி சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

கொள்ளை குறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News