உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-06-20 07:36 GMT   |   Update On 2023-06-20 07:36 GMT
  • கணவன், மனைவியிடையே குடும்ப தகராறில் விபரீதம்
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமம், காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28), தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (21).

திருமணம் ஆனதிலிருந்து கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

மனமடைந்த சித்ரா வீட்டில் புடவை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

இதனைப் பார்த்த ராஜா மற்றும் உறவினர்கள், சித்ராவை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆரணி சப்- கலெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தினார்.

Tags:    

Similar News