உள்ளூர் செய்திகள்

அக்னி வசந்த விழா

Published On 2023-05-30 13:24 IST   |   Update On 2023-05-30 13:24:00 IST
  • அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நாடக கலைஞர்கள் அர்ஜுனன் வேடம் அணிந்து கொண்டு பாடல்களைப் பாடிக் கொண்டு உயரமான மரத்தில் ஏறி மகாபாரதம் எப்படி நடைபெற்றது என்று தத்துரூபமாக நடித்துக் காண்பித்தனர். இந்த சிறப்புமிக்க அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் பாபு உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News