உள்ளூர் செய்திகள்

உற்சவர் சண்முகசுவாமி- தேவசேனா திருக்கல்யாணம் நடந்தது. தரிசனம் செய்த பக்தர்கள்.

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2023-11-20 09:49 GMT   |   Update On 2023-11-20 09:49 GMT
  • 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்ட பின் பஞ்ச ஆர்த்தி செய்யப்பட்டது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமிமலை:

அறுபடை வீடுகளின் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

விழாவின் 6ம் நாள் அன்று கந்தசஷ்டியை முன்னிட்டு, உற்சவர் சண்முகசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து மீனாட்சியம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வும் தொடர்ந்து, கிழக்கு சன்னதியில் சூரபத்மினி வதம் செய்கின்ற சூரசம்ஹாரமும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

7-ம் நாள் அன்று தேவசேனா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக முதலில் மாலை மாற்றும் வைபவமும், அதனை தொடர்ந்து ஊஞ்சலில் நலங்கு வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அக்னி யாகம் வளர்த்து மங்கள ஞான் பூட்ட உற்சவர் சண்முகசுவாமிக்கு தேவசேனாவுடன் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்ட பிறகு கோபுரத்தையும் பஞ்ச ஆர்த்தியும் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News