உள்ளூர் செய்திகள்

கோவையில் அடுத்தடுத்து கட்டிடத் தொழிலாளி - மூதாட்டி வீட்டில் நகைகள் கொள்ளை

Published On 2023-09-09 14:01 IST   |   Update On 2023-09-09 14:01:00 IST
  • கூலித்தொழிலாளி வீட்டில் 5 பவுன் செயின், அரை பவுன் கம்மல், ஒரு பவுன் மோதிரம், பணம் திருட்டு
  • வீட்டுக்குள் தூங்கிய மூதாட்டியிடம் 2 தங்க வளையல்கள் கொள்ளை

கோவை,

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கைலாசம் (வயது 49).

இவர் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு வந்து விட்டார். இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் செயின், அரை பவுன் கம்மல், ஒரு பவுன் மோதிரம் மற்றும் ரொக்கப்பணம் திருடுபோய் இருந்தது.

இதுபற்றி அவர் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோன்று கோவை கணபதி, எப்.சி.ஐ. ரோட்டில் உள்ள வரதராஜூலு நகரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி அம்மாள் (வயது 73). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பாப்பாத்தி அம்மாள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்மநபர் வீட்டிற்குள் நுழைந்து ரு.45000 2 தங்க வளையல்களை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் சரவணம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார்.

புகாரை பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது,வீட்டிற்குள் வந்த திருடன் சத்தம் இல்லாமல் வளையல்களை திருடிக் கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சரவ்ணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News