உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2023-09-18 13:54 IST   |   Update On 2023-09-18 13:54:00 IST
  • திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருத்துறைப்பூண்டி நகரம், வேலூர், பாண்டி, குன்னலூர், இடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோவில், ஆழிவலம், ஆண்டாங்கரை, குன்னூர், பாமணி, கொறுக்கை, கொக்கலாடி, பெருகவாழ்ந்தான், பாலையூர், சித்தமல்லி, பெருவிடைமருதூர், நாணலூர், தேவதானம், சிறுகளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபு தெரிவித்தார்.

Tags:    

Similar News