உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் டீக்கடையில் பணம்-பொருட்கள் திருட்டு

Published On 2023-01-24 09:18 GMT   |   Update On 2023-01-24 09:18 GMT
  • முருகன் முள்ளக்காடு மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார்.
  • திருட்டு குறித்து முத்தையாபுரம் போலீசில் முருகன் புகார் செய்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜூவ்நகரை சேர்ந்தவர் முருகன் (வயது52). இவர் முள்ளக்காடு மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இன்று அதிகாலை கடையை திறக்க முருகன் சென்றார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் சில பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு இடத்தில் 40 கோழிகளும், மற்றொரு இடத்தில் காரில் வந்து ஆடுகளையும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். எனவே இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News