உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி பெட்டிக்கடையில் திருட்டு
- பெட்டிக்கடையை திறக்க சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப் பட்டியை சேர்ந்தவர் சூசை. இவரது மனைவி ஞான ஜோதி ( வயது 40). இவர் சுனாமி காலனி பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இன்று காலை கடையை திறக்க சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.