உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி பெட்டிக்கடையில் திருட்டு

Published On 2022-06-17 07:42 GMT   |   Update On 2022-06-17 07:42 GMT
  • பெட்டிக்கடையை திறக்க சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
  • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப் பட்டியை சேர்ந்தவர் சூசை. இவரது மனைவி ஞான ஜோதி ( வயது 40). இவர் சுனாமி காலனி பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இன்று காலை கடையை திறக்க சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News