உள்ளூர் செய்திகள்
வாலிபருடன் பெண் ஓட்டம்- கணவன் போலீசில் புகார்
- வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு திரும்ப வில்லை.
- ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஹரிபாபு என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீஸ் சரகம் ராம்நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி ராபிமா.
இவர் கடந்த 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு திரும்ப வில்லை.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் ராஜசேகர் எனது மனைவியை வேலூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஹரிபாபு என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.