உள்ளூர் செய்திகள்

குறைகளை கேட்டறிந்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை வாங்கினார்.

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த போலீஸ் சூப்பிரண்டு

Published On 2022-07-21 07:36 GMT   |   Update On 2022-07-21 07:36 GMT
  • பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
  • கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

நாகப்பட்டினம்:

நாகையில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் கேட்டறிந்து 31 மனுக்களை பெற்றார்கள். பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும் பொதுமக்கள் இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நாகை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கீதா, நகர இன்ஸ்பெக்டர்கள் சரவணன், தியாகராஜன், சிவராமன், ஆனந்தராஜ், பசுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News