உள்ளூர் செய்திகள்

உடன்குடி பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கலர் கோலப்பொடிகள்.


உடன்குடி பகுதியில் கலர் கோலப்பொடி விற்பனை தீவிரம்

Published On 2023-01-09 09:16 GMT   |   Update On 2023-01-09 09:16 GMT
  • பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுவதையொட்டி, தற்போது வீட்டுக்கு முன்பு வண்ண, வண்ண கோலங்கள் இட்டு தைப்பொங்கலை முன்னதாகவே வரவேற்று வருகின்றனர்.
  • ஒரு சின்ன பாக்கெட் ரூ.10 என கிராமப்புறங்களில் நகர்ப்புறங்களிலும் விற்கப்படுகிறது.

உடன்குடி:

பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுவதையொட்டி, தற்போது வீட்டுக்கு முன்பு வண்ண, வண்ண கோலங்கள் இட்டு தைப்பொங்கலை முன்னதாகவே வரவேற்று வருகின்றனர்.

இதையொட்டி உடன்குடி வட்டார பகுதியில் பஜார் வீதிகள், பரமன்குறிச்சி, தண்டுபத்து, செட்டியாபத்து, சீர்காட்சி, பிச்சிவிளை, லட்சுமிபுரம், அம்மன்புரம், கொட்டங்காடு சோமநாதபுரம், தாண்டவன் காடு, பெரியபுரம், குலசேகரன்பட்டினம், மாதவன்குறிச்சி, சிறுநாடார்குடியிருப்பு, தாங்கையூர் மற்றும் சுற்றுபுறகிராமங்களிலும், தெருக்களிலும் கலர்கோலப்பொடி விற்பனை தீவிரமடைந்துள்ளது.

ஒரு சின்ன பாக்கெட் ரூ.10 என கிராமப்புறங்களில் நகர்ப்புறங்களிலும் விற்கப்படுகிறது. அனைத்துதரப்பு மக்களும் பொங்கல் பண்டிகைக்காக கோலப் பொடிகளை வாங்கி தினந்தோறும் வீட்டில் வாசல்களில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு அசத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News