உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்தது

Published On 2022-10-07 09:34 GMT   |   Update On 2022-10-07 09:34 GMT
  • சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நட்றாம்பாளையம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராத விதமாக திடீரென மோதிக்கொண்டன.
  • இதையடுத்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. உடல் கருகிய இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

சேலம்:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நட்றாம்பாளையம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராத விதமாக திடீரென மோதிக்கொண்டன.

இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.இதையடுத்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது .

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற 25 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவரின் உடலிலும் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரச ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். இந்த தீ விபத்தில் 50 சதவீதம் அவரது உடல் கருகியது.

தொடர்ந்து அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கொண்ட லாம்பட்டி போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News