உள்ளூர் செய்திகள்

குறிஞ்சிப்பாடியில் மின் தகன மேடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்:பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-07-24 12:10 IST   |   Update On 2023-07-24 12:10:00 IST
  • குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில் மின் மயானம்அமைக்க முடிவு செய்யப்பட்டது.
  • உடல்களை எரிக்கும் பொழுது சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளது.

கடலூர்:

குறிஞ்சிப்பாடி நகரில்5-க்கும் மேற்பட்ட இடங்களில் பழமையான மயானங்கள் உள்ளன.அவற்றில் அந்தந்த பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களை புதைத்தும் எரித்தும் வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கத் தால் இவற்றில் இடப்பற் றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அதனை அடுத்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில் மின் மயானம்அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன.

அதில் பேரூராட்சிக்கு பின்புறத்தில் உள்ள மயா னத்தை தேர்வு செய்தனர்.அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். தொடக் கத்தில் விளைநிலங்களுக்கு நடுவே இந்த மயானம் இருந்தது. தற்பொழுது அப்பகுதி முழுவதும் வீடு களாக மாறிவிட்டன. உடல்களை எரிக்கும் பொழுது சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களை பாதிக்காத வகையில் வேறு இடத்தில்உள்ள மயா னங்களை தேர்வு செய்து அங்கு மின் மயானத்தை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளனர்.

Tags:    

Similar News